உள்ளூர் செய்திகள்

விளையாட்டு மைதானத்திற்காக காலையில் அ.தி.மு.க-வில் இணைந்த இளைஞர்கள் இரவு பா.ம.க-வில் சேர்க்கை

Published On 2023-07-05 15:31 IST   |   Update On 2023-07-05 15:31:00 IST
  • கருவேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பா.ம.க இளை ஞர்கள் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த னர்.
  • அ.தி.மு.க.வில் இணைந்த விவகாரம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வரை சென்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள கரு வேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த பா.ம.க இளை ஞர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை முன்னாள் அமைச்சரும் தருமபுரி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த னர்.

பா.ம.க. வினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சியில் அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர் கலந்து கொண்டனர். பா.ம.க வினா் அ.தி.மு.க.வில் இணைந்த விவகாரம் பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வரை சென்றது.

பா.ம.க. -வின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் பா.ம.க. வில் இருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்த இளைஞா்களை நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பது குறித்து கேட்டறி ந்தார்.

காலையில் அ.தி.மு.க. வில் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சினா் தங்களை பா.ம.க மாவட்ட செயலாளா் அரசாங்கம் முன்னிலையில் மீண்டும் பா.ம.க. வில் இணைத்துக் கொண்டதாக பாட்டாளி மக்கள் கட்சியினர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் . சமுக வலை தளபதிவில் அரூர் சட்டமன்றத் தொகுதி மொரப்பூர் ஒன்றியத்தில் கருவேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த இளைஞர்கள் விளையாட்டு மைதானம் வேண்டி அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமாரிடம் முறையிட்டபோது நீங்கள் அனைவரும் அ.தி.மு.க. வில் இணைந்தால் மட்டுமே உங்களுக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர முடியும் என கூறி பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் இணைய வற்புறுத்தியதாக பா.ம.க. வினர் முகநூல் பக்கத்தில் தெரிவித்து ள்ளனர்.

கருவேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காலையில் அ.தி.மு.க துண்டு களுடனும் இரவு பாட்டாளி மக்கள் கட்சி துண்டுகளுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது குறிப்பிட த்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான கட்சிகள் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் இத்தகைய கட்சி தாவல்கள் தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News