உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

உத்தமபாளையம்: முன்விரோதத்தில் தென்னை, எலுமிச்சைமரங்களை சேதப்படுத்திய வாலிபர்

Published On 2023-08-16 11:22 IST   |   Update On 2023-08-16 11:22:00 IST
  • நிலப்பிரச்சினை காரணமாக வாலிபர் எலுமிச்சை மற்றும் தென்னை மரங்களுக்கு தீ வைத்தார்.
  • புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது34). இவருக்கு ஆனை மலையான்பட்டி பாலோடை அருகே தோட்டம் உள்ளது. இங்கு தென்னை, எலுமிச்சை விவ சாயம் செய்து வருகின்றார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த கண்ணன் (34) என்பவருக்கும் நிலப்பிரச்சினை காரண மாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இங்கு புகுந்த ஆனந்த கண்ணன் தென்னை, எலுமிச்சை மரங்களை சேதப்படுத்தி தீ வைத்தார்.

இது குறித்து ராயப்ப பன்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

ராாயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜஸ்டின்பிர பாகர். கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவர் சவரிமுத்து என்பவரின் கட்டிட வேலை பார்த்து அதற்கான முழு பணத்ைத பின்னர் தருவதாக கூறி இருந்தார். ஆனால் பணம் தராமல் காலம் தாழ்த்திய தால் சவரிமுத்துவிடம் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சவரிமுத்து, அவரது மனைவி பாப்பா உள்பட 5 பேர் ஜஸ்டின்பி ரபாகரை கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டி உள்ளனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News