உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

Published On 2023-08-05 08:48 GMT   |   Update On 2023-08-05 08:48 GMT
  • ரிஷிவந்தியம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

ரிஷிவந்தியத்தை அடுத்த லாலாபேட்டையை சேர்ந்த வர் சுந்தரபாண்டியன் (வயது 25) விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் கீழத்தேனூரில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். கீழத்தேனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு பஸ் சுந்தரபாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச் சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே சுந்தர பாண்டியன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் அய்யனார் பாளை யத்தை சேர்ந்த சக்திவேல் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News