உள்ளூர் செய்திகள்
- இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் உடல்நலம் சரியாகவில்லை.
- பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே உள்ள சூடு கொண்ட பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் உடல்நலம் சரியாகவில்லை. இதனால் மனவிரக்தியில் இருந்த மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.