உள்ளூர் செய்திகள்
- வயிற்று வலி காரணமாக கடுமையாக அவதியடைந்து வந்தார்.
- மனவேதனையில் இருந்த விஜய் பாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சத்திரம் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது23).
இவர் வயிற்று வலி காரணமாக கடுமையாக அவதியடைந்து வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த விஜய் நேற்று பாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தளி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.