உள்ளூர் செய்திகள்
பெரியகுளத்தில் வாலிபரை தாக்கி நகை பறிப்பு
- குடிபோதையில் வாலிபரை மிரட்டி நகையை பறித்து சென்றவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்க ரையை சேர்ந்தவர் மாரிமுத்து (32). இவர் தனது குழந்தைக்கு பால் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நாகராஜ், ராஜேஸ், சவுந்தர் ஆகியோர் குடிபோதையில் அவரை வழிமறித்து பணம் கேட்டனர்.
அதற்கு மாரி முத்து பணம் இல்லை எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தனர்.
மேலும் இதுகுறித்து யாரிட மும் தெரிவிக்கக் கூடாது. மீறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் காயமடைந்த மாரி முத்து பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.