உள்ளூர் செய்திகள்

புதுவையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மது பாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது: வாகனம் பறிமுதல்

Published On 2023-08-02 07:13 GMT   |   Update On 2023-08-02 07:13 GMT
  • சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
  • சதீஷ்குமார் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருபாலபந்தல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தனசேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாபு அந்தோணி முத்து உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாடாம் பூண்டி கூட்டுச்சாலை அருகே சந்தேகப்படும்படியாக வந்த டாடா ஏ.சி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்தனர் விசாரணையில், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தை சேர்ந்த மணி மகன் சதீஷ்குமார் (வயது 35) மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புடைய 270 மது பாட்டில்களை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில் மற்றும் மது பாட்டில் கடத்துவதற்கு பயன்படுத்திய டாட்டா ஏ.சி.வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News