உள்ளூர் செய்திகள்

தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி- வாலிபர் கைது

Published On 2024-08-24 14:02 IST   |   Update On 2024-08-24 14:02:00 IST
  • ரெயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம், காட்பாடி வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கும் ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் காட்பாடி அருகே உள்ள முகுந்தராயபுரம் ரெயில் நிலையம்-திருவலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே ரெயில்களை கவிழ்க்கும் வகையில் தண்டவாளத்தின் மீது சுமார் 9 அடி நீளமுள்ள இரும்பு துண்டு மற்றும் கற்களை கடந்த 17-ந் தேதி மர்ம நபர்கள் வைத்து சென்றனர் . இதனை அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் பார்த்து அப்புறப்படுத்தினர்.

பின்னர் இது தொடர்பாக முத்தையாபுரம் ரெயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்தது ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜா பகுதியை சேர்ந்த நவீன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது ரெயில் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரிய வந்தது.

வாலிபரை கைது செய்த தனிப்படையினரை தமிழ்நாடு ரெயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் சூப்பிரண்டு ஈஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

Similar News