உள்ளூர் செய்திகள்

தமிழ்செல்வி

பண்ருட்டி அருகே திருமணமான 2 வருடத்தில் இளம் பெண் மர்ம சாவு:போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

Published On 2023-03-17 09:26 GMT   |   Update On 2023-03-17 09:26 GMT
  • அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)குழந்தை எதுவும் இல்லை .
  • 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார்

கடலூர்:

பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் காலணிடேங்க்தெருவைசேர்ந்தவர்அழகுவேல்.இவர்கேரளாவில்பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.இவரதுமனைவி தமிழ்ச்செல்வி (28)இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தை எதுவும் இல்லை . 20 நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு மனைவியுடன் சென்றார். அங்கு தமிழ்செல்வி இறந்து விட்டார். அவரது உடலை பனப்பாக்கத்திற்கு அழகுவேல் கொண்டு வந்தார்.

இதற்கிடையில் இறந்து போன தமிழ் செல்வி உறவினர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் .அவர்களிடம் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதால் மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம்போலீசார் ெதாடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News