உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனியில் திருமணத்தன்று நகை, பணத்துடன் மாப்பிள்ளை மாயம்

Published On 2023-02-04 05:10 GMT   |   Update On 2023-02-04 05:10 GMT
  • மாப்பிள்ளை ரூ.1 லட்சம் பணம், 40 பவுன் தங்க நகை மற்றும் காலி இடத்துக்கான பத்திரம் ஆகியவற்றுடன் மாயமானார்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பிரபாகரன் (வயது27). இவர் பி.எஸ்.சி படித்து விட்டு மதுரை திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இவர்கள் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் பிரபாகரன் கார், ரூ.1 லட்சம் பணம், 40 பவுன் தங்க நகை மற்றும் காலி இடத்துக்கான பத்திரம் ஆகியவற்றுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை தேடி வருகி ன்றனர். திருமணத்தன்று நகை, பண த்துடன் புதுமாப்பிள்ளை மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News