உள்ளூர் செய்திகள்
- கூடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் திடீரென மாயமானார்.
- புகாரின் பேரில் போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 13-வது வார்டு கே.கே.காலனியை சேர்ந்த கருப்பு மகன் பிரபாகரன்(28). இவர் கடந்த 5 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீரபாண்டி கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.