உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை

Published On 2023-07-16 05:40 GMT   |   Update On 2023-07-16 05:40 GMT
  • தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தத்தெடுத்து குழந்தையை வளர்த்து வந்தனர்.
  • மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.

தேனி:

தேனி பவர் கவுஸ் தெருவை சேர்ந்தவர் ஜெயசுதா (வயது40). இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயேந்திரன் (53) என்பருக்கும் கடந்த 1998-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தேனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். ஜெயேந்திரன் மது குடித்து விட்டு வந்து கூடுதலாக நகை, பணம் கேட்டு ஜெயசுதாவை சித்ரவதை செய்துள்ளார்.மேலும் சசிகலா என்ற பெண்ணுடன் சேர்ந்து சித்ரவதை செய்வதாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஜெயேந்திரன் மற்றும் சசிகலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News