உள்ளூர் செய்திகள்
- சம்பவத்தன்று தமயந்தியின் அப்பா மற்றும் அவருடைய காதலனிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
- மன விரக்தியில் இருந்த தமயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமயந்தி (வயது 19). இவர் கிருஷ்ணகிரி அரசு கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மாணவனுடன் இரண்டு வருடமாக காதல் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தமயந்தியின் அப்பா மற்றும் அவருடைய காதலனிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது . இதனால் மன விரக்தியில் இருந்த தமயந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.