உள்ளூர் செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது

Published On 2022-10-29 14:24 IST   |   Update On 2022-10-29 14:24:00 IST
  • ஷாஜகான் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
  • இளம்பெண் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றார்

கோவை,

கோவை மரக்கடையை சேர்ந்தவர் ஷாஜகான். இவர் அந்த பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் அங்கு இருந்த மேலாளரிடம் மரம் வேண்டும் என கேட்டார். மரத்தை காண்பித்த மேலாளர் சாப்பிடுவதற்காக சென்றார்.

அப்போது அந்த இளம்பெண் கல்லாவில் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடி தப்பிச் சென்றார். இது குறித்து அவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்த சமீரா (வயது 32) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2020 -ம் ஆண்டு போத்தனூரை சேர்ந்த அப்துல் மஜித் என்பவரிடம் 5 பவுன் நகைகளை திருடியது தெரிய வந்தது.

இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து ரூ.1½ லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

Tags:    

Similar News