காட்டிநாயனப்பள்ளி கிருஷ்ணா கல்லூரியில் யோகா பயிற்சி முகாம்
- யோகாவின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
- தொடர்ந்து பல்வேறு யோகாசன நிலைகளை செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை கல்லூரி தாளாளரும், முன்னாள் எம்.பி.யுமான பெருமாள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கல்லூரி தலைவர் வள்ளி பெருமாள், கல்வியியல் கல்லூரி முதல்வர் அமலோற்பவம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை கல்லூரி முதல்வர் ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். பதஞ்சலி யோகா சமிதி அமைப்பின் மாநில தலைவர் யோகாச்சார்யா பரஸ்ரீ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் யோகாவின் சிறப்புகள், அதன் அவசியம் குறித்து மாணவர்களிடையே பேசினார். தொடர்ந்து பல்வேறு யோகாசன நிலைகளை செய்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பதஞ்சலி யோகா சமிதியின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், யோகா ஆசிரியர் சுமித்ரா, பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவழகன், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.