உள்ளூர் செய்திகள்
- பதஞ்சலி யோகா சமிதி சார்பில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- இதில், ஏராளமான ஆண்கள் பெண்கள், சிறுவர்,சிறுமியர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 9-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பதஞ்சலி யோகா சமிதி சார்பில் இன்று யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில், ஏராளமான ஆண்கள் பெண்கள், சிறுவர்,சிறுமியர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் யோகா பயிற்சிகள் செய்தனர்.
இதில், சூரிய நமஸ்காரம், மூச்சு பயிற்சி, வயதானவர்களுக்கு எளிய பயிற்சி, பிராணயாமம் போன்ற பல்வேறு முதற் கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. யோகா சமிதியின் மாநில தலைவர் பாரஸ், பயிற்சிகளை வழங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, பி.எம்.சி. கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார், வெங்கடேஸ்வரா சுவாமிஜி, மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், தனியார் பள்ளி தாளாளர் அஸ்வத் நாராயணா, வக்கீல் ராம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.