உள்ளூர் செய்திகள்

யாகசாலை பூஜைகள் நடைபெற்றது மற்றும் கும்பாபிஷேகத்தை யொட்டி மாணவிகள் நடனமாடினர்.

யாகசாலை பூஜைகள் தொடங்கியது; சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

Published On 2023-07-04 15:00 IST   |   Update On 2023-07-04 15:00:00 IST
  • கடந்த 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
  • 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

அதன்படி கடந்த வரும் 29- ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முதல் கால யாகசாலை பூஜை நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

இதற்காக 52 யாக குண்டங்கள் அமைக்கப்படு, 108 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கினர்.

இதற்காக கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள பால் குளத்தில் இருந்து புனித நீர் யானை மீது எடுத்து வந்து யாாகசாலையில் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை பூர்ண பகுதி பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து நாளை (புதன்கிழமை 05.07.2023) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட உள்ளது நடக்கிறது.

குடமுழுக்கு விழாவையொட்டி 400- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட உள்ளனர்.

Tags:    

Similar News