உள்ளூர் செய்திகள்

தண்டாயுதபாணி கோவிலில் ஆனி கார்த்திகை வழிபாடு

Published On 2022-06-26 09:44 GMT   |   Update On 2022-06-26 09:44 GMT
  • உற்சவத்திரமூர்த்தி முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • மாலையில் பழனி ஆண்டவர் வழிபாட்டு சங்க மகளிர் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பூதலூர்:

திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உற்சவத்திரமூர்த்தி முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மூலவருக்கும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மாலையில் பழனி ஆண்டவர் வழிபாட்டு சங்க மகளிர் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் திரளான பெண்கள்கலந்து கொண்டு பக்தி சிரத்தையுடன் வழிபாடு நடத்தினர்.

Tags:    

Similar News