உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே நோய் கொடுமையால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-04-03 10:02 GMT   |   Update On 2023-04-03 10:02 GMT
  • வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
  • மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேனி:

தேனி அருகே தேவாரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News