உள்ளூர் செய்திகள்
- மத்திகிரி அருகே தையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை மேற்கொ்ண்டு வருகின்றனர்.
மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளியை சேர்ந்தவர் வினய்குமார் (வயது 38). தையல் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் குடும்பத்தில் பிரச்சினை இருந்தது. இதனால் கோபித்துக் கொண்டு கடந்த 19-ந் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றார். இதனால் மன வருத்தத்தில் இருந்த வினய்குமார் கடந்த 23-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.