உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2023-11-27 15:44 IST   |   Update On 2023-11-27 15:44:00 IST
  • கிருஷ்ணகிரி அருகே விஷம் குடித்து தொழிலாளி இறந்தார்.
  • போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் சுப்பிரமணி( வயது45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 21ந்தேதி அன்று வீட்டில் இருந்த பூச்சிகொல்லி மருந்தை எடுத்து வந்து ஊத்தங்கரை தனியார் மில் அருகே குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

அதனை கண்ட அந்த பகுதி மக்கள் அவரது உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சுப்பிரமணியை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். பின்னர் மேற்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சுப்பிர மணியின் தாய் பூங்கொடி அளித்த புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர். 

Similar News