உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது
- வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த பாலமுருகன், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
- இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது என கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 45). இவர் சம்பவத்தன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாத நிலையில் இருந்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளாார்.
அங்கு யாரும் இல்லாததை அறிந்த அவர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட ஒரு பெண், பாலமுருகனை கண்டித்துள்ளார்.
அதற்கு பாலமுருகன் இதை பற்றி யாரிடமும் கூறக்கூடாது என கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.