உள்ளூர் செய்திகள்

கருமத்தம்பட்டியில் தொழிற்சாலையில் பணம் திருடிய தொழிலாளி கைது

Published On 2022-06-24 10:00 GMT   |   Update On 2022-06-24 10:00 GMT
  • கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் பிரபு (44) என்பவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.
  • தொழிற்சாலையில் வைக்க ப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார்.

கருமத்தம்பட்டி:

கருமத்தம்பட்டி பகுதியில் மூர்த்தி (வயது 51) என்பவருக்கு சொந்தமான தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் பிரபு (44) என்பவர் கணக்காளராக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20-ந் தேதி செந்தில் பிரபு அலுவலக அறையில் ரூ. 52 ஆயிரம் வைத்து வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.52 ஆயிரம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர் தொழிற்சாலையில் வைக்க ப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தார். அப்போது அங்கு வேலை செய்து வந்த வேலூரை சேர்ந்த சுரேஷ் (24) என்பவர் அலுவலக அறையில் வைக்கப்ப ட்டிருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செந்தில் பிரபு கருமத ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய தொழில ாளியை தேடி வந்தனர்.

அப்போது சுரேஷ் கடலூர் பகுதியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சுரேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News