உள்ளூர் செய்திகள்
வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணைகள்
- பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
- 54-க்கு ் மேற்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள மாதம்பட்டி மில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர்களுக்கு சென்னை டர்போ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரியின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை உரையாற்றினார். பொருளாளர் ராஜாக்கவுண்டர் மற்றும் செயல் இயக்குனர் மாதுளம் பூ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கல்லூரியின் முதல்வர் கந்தசாமி வரவேற்று பேசினார். டர்போ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் நடராஜன் மாணவர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தியும் சுமார் 54-க்கு ் மேற்பட்ட மாணவர்களை தேர்ந்தெடுத்து பணி நியமன ஆணையை வழங்கினார்.
முகாமின் முடிவில் மின்னணுவியல் துணைத் தலைவர் தேவன் நன்றி கூறினார்.