உள்ளூர் செய்திகள்
இறுதி கட்டத்தில் பணி: கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு
- 90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன.
- விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி நடந்து வருகறிது.
90 சதவீதத்துக்கு மேல் கட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. எனவே விரைவில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடந்து வரும் பணிகளை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம்போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சீனிவாசராவ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.