- நதியா கணவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- அவர் மாமியார் வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே சந்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி நதியா (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இதனால் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு கரிகாளிப்பட்டியில் உள்ள தனது தாய்வீட்டிற்கு வந்து விட்டார். அங்கு கணவர் இறந்த துக்கத்தில் இருந்த நதியா சற்று மனநிலை சரியில்லாமல் காணப்பட்டார்.
கடந்த 22-ந் தேதி நதியா கணவர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இதுகுறித்து நதியாவின் தாயார் விசாரித்தபோது, அவர் மாமியார் வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் பதறிப்போன அவர் நதியாவை பல இடங்களில் தேடிபார்த்தார். எங்கும் தேடியும் நதியா கிடைக்காததால், மாயமானது தெரியவந்தது.
இது குறித்து நதியாவின் தாயார் மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நதியாவை தேடிவருகின்றனர்.