உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்தில் பெண் பலி

Published On 2022-08-08 09:44 GMT   |   Update On 2022-08-08 09:44 GMT
  • சித்ரா சம்பவத்தன்று தனது மொட்டில் சந்திரபுரம்- சுல்தான்பேட்டை ரோட்டில் சென்றார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர் புளியமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சித்ரா (வயது 44). இவர் சம்பவத்தன்று தனது மொபட்டில் சந்திரபுரம்- சுல்தான்பேட்டை ரோட்டில் சென்றார். அப்போது அவரது மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News