உள்ளூர் செய்திகள்

பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-11-06 10:13 GMT   |   Update On 2023-11-06 10:13 GMT
  • பென்னாகரம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • வயிற்று வலியால் விபரீத முடிவு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மிட்ட தாரர் தெருவைச் சேர்ந்தவர் நசீர்பாஷா. இவரது 2-வது மனைவி ஷம்சாத் (வயது48). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசீர்பாஷா இறந்து விட்டார். இந்த நிலையில் ஷம்சாத் தனது மகன் வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்தார். ஷம்சாத்துக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் அவதியடைந்தார். இதன் காரணமாக மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு 11மணியளவில் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு பென்னா கரம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஷம்சாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து நசீர்பாஷா–வின் மகன் மஹப்பூஷா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News