உள்ளூர் செய்திகள்

தீயில் கருகி பெண் சாவு

Published On 2023-04-17 12:55 IST   |   Update On 2023-04-17 12:55:00 IST
  • வீட்டில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்த போது திடீரென சேலையில் தீப்பிடித்தது.
  • அந்த தீ மளமளவென உடலில் பரவியது.

சங்ககிரி:

சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் மட்டம்பட்டி வன்னியர தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி வயது (வயது 88). இவர், வீட்டில் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்த போது திடீரென சேலையில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென உடலில் பரவியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். ஆரோக்கியமேரி மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆரோக்கிய மேரி பரிதா பமாக இறந்தார். இதுகு றித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News