உள்ளூர் செய்திகள்
2-வது திருமணம் செய்வதாக கணவன் கூறியதால் மனைவி தற்கொலை
- தனது மனைவியிடம் ஆண் வாரிசு பெற்று கொள்வதற்காக உனது தங்கையை 2-வதாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
- மனமுடைந்த காணப்பட்ட ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
தருமபுரி,
தருமபுரி செட்டிகரை ஐம்பேரி. இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது32). இவர்களுக்கு 3 பெண்குழந்தைகள். இதனால் தனக்கு 4-வதாக ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று மனைவியிடம் கணவர் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஜம்பேரி தனது மனைவியிடம் ஆண் வாரிசு பெற்று கொள்வதற்காக உனது தங்கையை 2-வதாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த காணப்பட்ட ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.