உள்ளூர் செய்திகள்

ஊஞ்சல் விளையாடிய போது கழுத்தில் துணி இறுக்கி பலியான சிறுவன்

Published On 2022-09-08 14:42 IST   |   Update On 2022-09-08 14:42:00 IST
  • இருவரும் வீட்டின் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தனர்.
  • எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கட்டிய சேலையில் எஸ்வந்து கழுத்துப்பகுதி மாட்டி கொண்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு எஸ்வந்த் (7), அபிதா (4) ஆகிய இருக்குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் வீட்டின் அருகே சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஊஞ்சல் கட்டிய சேலையில் எஸ்வந்து கழுத்துப்பகுதி மாட்டி கொண்டது. இதில் மயங்கிய நிலையில் அந்த சிறுவன் இருந்தார்.

இதனை பார்த்த தாய் ஓடி வந்து மகனை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டாதாக கூறியுள்ளார். இதைதொடர்ந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துமனையில் அனுமதிக்கபட்டுள்ளது.

இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

Tags:    

Similar News