உள்ளூர் செய்திகள்

லாரி மோதியதில்மோட்டார் சைக்கிளில் சென்ற பால்வியாபாரி பலி

Published On 2023-10-16 14:36 IST   |   Update On 2023-10-16 14:36:00 IST

கடலூர்: 

கடலூர் அடுத்த அணுகம்பட்டை சேர்ந்தவர் சிவா (வயது 48). பால் வியாபாரி. இவர் பால் வியாபாரம் செய்துவிட்டு கடலூர் பச்சையாங்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News