உள்ளூர் செய்திகள்

மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிக்கு பட்டாவினை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

அகமலையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் ரூ.7.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-11-09 05:12 GMT   |   Update On 2023-11-09 05:12 GMT
  • அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

தேனி:

தேனி மாவட்டம், போடிஅருகே அகமலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.7.21 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி முன்னிலையில் வழங்கினார்.

முகாமில் கலெக்டர் பேசியதாவது,

அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதற்கு தீர்வுகாணும் வகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.

பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் ஆரம்ப கல்வி, உயர்கல்வி, மேல்நிலை கல்வி பயில்வதில் உறுதியாக இருக்க வேண்டும். 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் ஆரம்ப கல்வி முறையினை கற்பதற்கும், சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வதற்காகவும் அங்கன்வாடி மையத்தில் சேர்க்க வேண்டும்.

குழந்தை திருமணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். சிறுவயதில் கர்ப்பம் அடைதல், குறைவான எடையில் குழந்தை பெற்றெடுத்தல் ஆகியவற்றை தவிர்க்க குறிப்பிட்டுள்ள 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர், பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும்.

பல்வேறு தொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், சுயதொழில் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வங்கிகளின் மூலம் பெற்றவர்கள் அதனை முறையாக குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தினால் வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

மழைக்காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளை ஆக்கிரமித்து சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. முடிந்தவரை பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொடர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தொற்று ஏதும் ஏற்பட்டிருப்பின் சுகாதார நிலையத்தினை அணுகி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News