உள்ளூர் செய்திகள்
குடிநீர் குழாய் உடைப்பால் 3 நாட்களாக சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்.
- கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
- இந்த நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை-டவுன் சாலையில் குளத்தங்கரை பள்ளிவாசல் அருகே கடந்த 3 நாட்களாக குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இந்த நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் சாலை சேதம் அடைவதோடு அந்த வழியாக செல்கின்ற வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் வேகமாக செல்லும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பள்ளத்தில் இறங்கும்போது அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது அசுத்தமான தண்ணீர்பட்டு வருகிறது.
எனவே தண்ணீர் வீணாகாமல் தடுக்க உடனடியாக குடிநீர் குழாய் பழுதை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.