உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்லில் பெண் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணிகலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்

Published On 2023-11-14 13:37 IST   |   Update On 2023-11-14 13:37:00 IST
  • பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பூங்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,

பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், பெண் குழந்தைகளுக்கு கற்பிக்கவும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெண் சிசுக்களை பாதுகாப்பதற்காக கருவில் இருக்கும் பெண் சிசுக்களை பாதுகாத்தல், பிறந்த பெண் குழந்தைகளை பாதுகாத்தல், பெண் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாத்தல், குழந்தை திருமணத்தை தடுத்து பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான நடை விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது.

பெண் குழந்தைகளுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் ஜீவசிந்து, தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News