உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் வாக்காளர் சேர்க்கை முகாம்-ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

Published On 2023-11-05 08:00 GMT   |   Update On 2023-11-05 08:00 GMT
  • 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது.
  • நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் 36 கிராம சேனைத்தலைவர் பள்ளியில் பூத் எண் 16-ல் வாக்காளர் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடைபெற்றது. அதனை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

அப்போது சங்கரன்கோவில் நகர பூத் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினருமான தங்கவேலு, நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன், வார்டு செயலாளர் கோமதிநாயகம், பூத் பொறுப்பாளர்கள் சங்கரமகாலிங்கம், மாரியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News