உள்ளூர் செய்திகள்

போட்டியை தொடங்கி வைத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்தினார்.

அரசு பள்ளியில் கைப்பந்து போட்டி- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2022-10-19 10:04 GMT   |   Update On 2022-10-19 10:04 GMT
  • 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
  • மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கைப்பந்து (கேன் பால்) போட்டி தொடங்கப்பட்டது.

இந்தப் போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார் வரவேற்றார். மாணவர்களுக்கான இப் போட்டியில் 27 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

14 வயது, 17 வயது, 19 வயது என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.

மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தா, உடற்கல்வி ஆய்வாளர் தேன்மொழி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News