பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான நவீன செயற்கைகால்களையும், செவித்திறன் குறைபாடுடைய 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பேசிகளையும் கலெக்டர்(பொறுப்பு) ரவிகுமார் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.