உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் களை கட்டிய தீபாவளி வியாபாரம்

Published On 2023-11-10 07:46 GMT   |   Update On 2023-11-10 07:46 GMT
  • விருதுநகரில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.
  • மொத்த பலசரக்கு கடைகள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.

விருதுநகர்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே இருப்பதால் விருதுநகரில் இறுதிகட்ட தீபாவளி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

விருதுநகர் மெயின் பஜாரில் உள்ள ஜவுளிக்கடை களில் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் திரண்டனர்.மேலும் நூற்றுக்கணக் கானோர் மெயின்பஜாரை சுற்றியுள்ள பகுதிகளில் சிறு கடைகளை அமைத்து வியா பாரம் செய்து வருகின்றனர்.

விருதுநகரில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்ததால் தீபாவளி வியா பாரம் பாதித்தது. இதனால் பொதுமக்கள் காலை நேரங்களில் புத்தாடைகள் வாங்க ஆர்வம் காட்டினர். நேற்று மாலை மழை இல்லை. இதன் காரணமாக மெயின்பஜாரில் தீபாவளி கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள், பெண்கள் என குடும்பத்தோடு வந்து பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.

இதேபோல் பாத்திரக் கடைகள், ரோட்டோர கடைகள், மொத்த பலசரக்கு கடை கள், மார்க்கெட்டுக்களில் கூட்டம் அலை மோதியது.

Tags:    

Similar News