உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிசிச்சை பெறுவோரிடம் உடல் நலம் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. விசாரித்தார்.

அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2023-11-03 08:49 GMT   |   Update On 2023-11-03 08:49 GMT
  • அரசு ஆஸ்பத்திரிகளில் ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
  • வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

ராஜபாளையம்

மழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் ராஜ பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் குழந்தை கள், முதியவர்கள் என பொதுமக்கள் என பலரும் காய்ச்சலால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை ராஜ பாளை யம்- தென்காசி ரோட்டில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் எம்.எல்.ஏ தங்க பாண்டியன் ஆய்வு மேற் கொண்டு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை களை முடுக்கி விட்டார்.

ஆய்வின்போது தங்க பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

ராஜபாளையம் தொகுதி யில் அதிகளவில் காய்ச்ச லால் குழந்தைகளும் பொது மக்களுக்கும் பாதிக்கப்பட்டு வருவதால் மருத்துவ மனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் செவிலி யர்கள் பணியில் இருக்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது. நோயாளிகளிடமும் கனிவுடன் பேசி அவர் களிடம் அவர்களுக்கு சாதா ரண காய்ச்சலா அல்லது வைரஸ் காய்ச்சலா என்பதை நன்கு ஆய்வு செய்து அதற்கான சிகிச்சை யை முறையாக வழங்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டு உள்ளது.

தினசரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் 150 முதல் 200 புறநோயாளி களுக்கும் அரசு மருத்துவ மனையில் 800 முதல் 1000 வரையிலான புறநோயாளி களுக்கும் மருத்துவம் பார்க்கப்படுகிறது. குழந்தை களுக்கு காய்ச்சல் என்றால் வீட்டில் வைத்து மருந்து கொடுப்பதை தவிர்த்து விட்டு உடனடியாக குழந்தை களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிசிச்சை பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவ மனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்து அதற்கான பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது, அந்த பணிகளை தங்கப் பாண்டி யன் எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்தார்.

தலைமை மருத்துவர் (பொறுப்பு) மாரியப்பன் அவர்கள் மருத்துவர் சுரேஷ் அவர்கள், பொதுப் பணித்துறை உதவிப் பொறி யாளர் பாலசுப்பிரமணியன் கவுன்சிலர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப் பாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News