உள்ளூர் செய்திகள்
- நகராட்சி அலுவலர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
- நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி மேலாளர் மல்லிகா முதல்நிலை மேலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேபோல் ராஜபாளையம் நகராட்சியில் 2-ம் நிலை கணக்கராக இருந்த காளியம்மாள் முதல் நிலை கணக்கராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
ராஜபாளையம் நகராட்சி 1 ஏ மேலாளராக இருந்த மகேஸ்வரன் முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார். மேற்கண்ட உத்தரவை நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் பொன்னையா பிறப்பித்துள்ளார்.