உள்ளூர் செய்திகள்

புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளான அரசு பஸ்.

அரசு பஸ் விபத்து

Published On 2022-06-14 13:17 IST   |   Update On 2022-06-14 13:17:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து புளியமரத்தில் மோதியது.
  • இந்த விபத்தில் பெண் காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பஸ் புளியமரத்தில் மோதியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

திருச்சியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விருதுநகரைச் சேர்ந்த டிரைவர் முனியசாமி ஓட்டி வந்தார். இதில் 43 பேர் பயணம் செய்தனர்.

மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி அருகே வரும் போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த பஸ் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

இந்த விபத்தில் பெண் காவலர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டனர். விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News