உள்ளூர் செய்திகள்

குரூப் 4-க்கான இலவச மாதிரி தேர்வு

Published On 2022-07-13 09:15 GMT   |   Update On 2022-07-13 09:15 GMT
  • குரூப் 4-க்கான இலவச மாதிரி தேர்வு 17-ந் தேதி நடக்கிறது.
  • தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 7301 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் (குரூப் 4) தேர்வு வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாவட்ட அளவிலான இலவச குரூப்- 4 மாதிரி தேர்வு வருகிற 17-ந் தேதி விருதுநகர் இந்து நாடார் செந்தில் குமார நாடார் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மாதிரி தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். அதனடிப்படையில், தேர்வர்கள் www.vnrjobfair.com என்ற இணையதளத்தில் விவரங்களை வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தங்களது விண்ணப்ப படிவத்தின் நகல், டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணை யத்தால் வெளியிடப்படும் ஹால் டிக்கெட் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கருப்புபால் பேனா ஆகிவற்றுடன் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.

குரூப்-4 தேர்வை பயமின்றி எளிதில் எதிர்கொள்ள இந்த இலவச மாதிரி தேர்வை எழுதி தேர்வர்கள் பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு 04562-293613 என்ற எண்ணில் தேர்வர்கள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News