உள்ளூர் செய்திகள்

வேனுடன் பட்டாசு திரிகள் பறிமுதல்- 2 பேர் கைது

Published On 2023-05-14 07:50 GMT   |   Update On 2023-05-14 07:50 GMT
  • வேனுடன் பட்டாசு திரிகள் பறிமுதல்- 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் செக்போஸ்ட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் விசாரித்த னர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனை சோதனையிட்டனர். அதில் 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சாக்கு மூடைகள் இருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்தத போது அதில் பட்டாசு திரிகள் இருந்தன.

மொத்தம் 13 மூடைகளில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு திரிகள் இருந்தன. போலீசார் வேனுடன் அவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வேனில் வந்தவர்கள் தாயில்பட்டி அண்ணா காலனிைய சேர்ந்த அருண்குமார் (வயது 26), கோட்டையூரை சேர்ந்த மகேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News