உள்ளூர் செய்திகள்

தேனீ வளர்ப்பு கருத்தரங்களை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

தேன் சந்தைப்படுத்தும் முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும்

Published On 2023-08-12 07:10 GMT   |   Update On 2023-08-12 07:10 GMT
  • தேன் சந்தைப்படுத்தும் முறைகளை விவசாயிகள் அறிந்து கொள்ள வேண்டும் என விருதுநகர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • சிறப்பாக செயலாற்ற முடியும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் கீழ் தோட்டக் கலைதுறை மூலம் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது. இதனை கலெக்டர் ஜெ யசீலன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

பூச்சிகளின் முக்கியத்து வத்தை மனிதன் விவசாயம் தொடங்குவதற்கு முன்பே புரிந்து கொண்டான். நன்மை செய்யக்கூடிய பூச்சி களை விவசாயிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இன்னும் கண்டறியப்படாத பூச்சிகளால் மனிதருக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை நாம் இன்னும் பயன்படுத்திக் கொண்டால் ஒவ்வொரு விவசாயியும் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும். அதில் ஒன்றுதான் இந்த தேனி வளர்ப்பு.

தேனின் மகத்துவத்தை சித்தா போன்ற அனைத்து மருத்துவமும் வெளிப் படுத்துகிறது. தேனீ வளர்ப்பை முறையாகவும் தொடர்ச்சியாகவும் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் கூடுதல் வருமானத்தை பெற முடியும்.

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சந்தைபடுத்து வதற்கான முறைகளை அறிந்து கொண்டு செயல்பட ேவண்டும். எனவே விவ சாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தேனீ வளர்ப்பு ஆர்வலர்கள் புதிய திட்டங்கள் மற்றும் மானியங்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News