உள்ளூர் செய்திகள்

பட்டாசு ஆலை தீ விபத்து; 3 பேர் மீது வழக்கு

Published On 2023-04-08 14:09 IST   |   Update On 2023-04-08 14:09:00 IST
  • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர்

சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலையில் 2 தினங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டு 3 அறைகள் சேதமாகின.

இதுகுறித்து ஒத்தையால் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் அங்கு ஆய்வு செய்து விருதுநகர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் ஆலையின் உரிமையாளர் சிவகாசியை சேர்ந்த மாரியப்பன், ஆலையை குத்தகைக்கு எடுத்து நடத்திய தாயில்பட்டியை சேர்ந்த வினோத், அன்பில் நகரத்தை சேர்ந்த பாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News