உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் இடம் பெற்றிருந்த கண்காட்சி அரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்ட காட்சி.

உர வகைகளை காட்சிப்படுத்திய கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனம்

Published On 2023-06-25 08:21 GMT   |   Update On 2023-06-25 08:21 GMT
  • கூட்டுறவு விற்பனை இணைய நிறுவனம் உர வகைகளை காட்சிப்படுத்தியது.
  • ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உர வகைகள், ஏடி.டி.42 வகை நெல்விதை, வேப்பம் புண்ணாக்கு துகள்கள் மற்றும் மண்புழு உரம் காட்சிபடுத்தப்பட்டது.

மேலும் இந்த உரங்கள் தொடர்பான தெளிவான விளக்க உரையுடன் கூடிய பதாகைகளும் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் புதிய வகை உரங்களை ஆர்வமுடன் விசாரித்து வாங்கி சென்றனர். இந்த கண்காட்சி அரங்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார்.

இந்த கூட்டத்தில் விருது நகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, இணை பதிவாளர், அலுவலக துணை பதிவாளர் மற்றும் பணியாளர் அலுவலர் சந்தனராஜ், அருப்புக்கோட்டை சரக துணை பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லி புத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் காந்திராஜ், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய விருதுநகர் மண்டல மேலாளர் ஜீவானந்தம், கூட்டுறவு ஒன்றிய பிரசார அலுவலர் செல்வராஜன் மற்றும் ஒன்றிய அலுவலர் முத்துகுமரன் ஆகியோரும் பங்கேற்றனர்.

Tags:    

Similar News