உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உள்ளனர்.

இல்லம் தேடி கல்வி திட்ட பெண் தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2022-07-22 08:01 GMT   |   Update On 2022-07-22 08:01 GMT
  • இல்லம் தேடி கல்வி திட்ட பெண் தன்னார்வலர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
  • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலராக இருப்பவர் சிவகாமி.

இவர் சமீபத்தில் தனது மையத்திற்கு வரும் மாணவர்களை அரசு நூலகத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள நடைமுறைகளை விளக்கியதுடன், அவர்களை உறுப்பினராகவும் சேர்த்தார்.

மேலும் மாணவர்களை பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுத்தி, ஓய்வு நேரத்தை மாணவர்கள் பயனுள்ளதாக செலவு செய்ய ஆலோசனை வழங்கினார். இது குறித்த தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தேரோட்ட முன்னேற்பாடு கூட்டத்திற்கு வருகை தந்த போது, தன்னார்வலர்கள் சிவகாமி மற்றும் லாவண்யாதேவியை ஆகியோரை அழைத்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இவர்களின் சிறந்த பணியை பாராட்டி, கலந்துரையாடி, ஊக்கம் அளித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சிவகாசி கோட்டாட்சியர் பிரிதிவிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News