உள்ளூர் செய்திகள்

72 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2023-08-28 11:58 IST   |   Update On 2023-08-28 11:58:00 IST
  • திருச்சுழி அருகே 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

திருச்சுழி

திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி. ஜெகந்நாதன் உத்தரவின்பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது மாங்குளம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற குலசேகரநல்லூர் பசும்பொன்நகரை சேர்ந்த கண்ணன்(54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்னர்.

Similar News