உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் தற்கொலை

Published On 2022-11-08 05:59 GMT   |   Update On 2022-11-08 05:59 GMT
  • பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி அருகே உள்ள கொங்கன்குளத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மகள் மாலதி. பிளஸ்-2 படித்து வந்த இவருக்கு வயிற்கு வலி இருந்து வந்தது. இதனால் விரக்தியடைந்த மாலதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரியாபட்டி பாண்டியன்நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மூக்காயி (48) இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. குடும்ப பிரச்சினை காரணமாக மூத்த மகள் கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் மூக்காயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள குகன் பாறையை சேர்ந்தவர் சோலைசாமி. இவரது மகன் சதீஸ்வரன் (28). திருப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு வீட்டுக்கு வந்தார். ஆனால் அதன் பின் அவர் வேலைக்கு செல்லவில்லை. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில் விரக்தியடைந்த சதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் கல்யாணி(24). இவரது கணவர் கணேஷ் 2 மாதமாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தியடைந்த கல்யாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News